"சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்து விட்டது. நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதே" (அல்குர்ஆன்:17:81)

Thursday, January 20, 2011

பத்து கட்டளைகள்

                              இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)

                                     அவர்களின் பத்து கட்டளைகள்

1.தொழுகைக்கான அழைப்பு கேட்டதுமே என்ன சூழ்நிலையில் இருந்தாலும்
  பள்ளியை நோக்கிச் செல்.


2.குர்ஆனை ஓது ! அல்லது பிறர் ஓதுவதைக் கேள் ஓய்வு நேரங்களில் அல்லாஹ்வை திக்ரு செய்,வீண் பேச்சு,வீண் வேலைகளில் ஈடுபடாதே

3.அரபுமொழியில் பேசக்கற்றுக்கொள்

4.அளவு மீறிய விவாதம் வேண்டாம்.அதனால் பயனில்லாது போய்விடும்.

5.கேலிபேசுவது,கேளிக்கை பேசுவதிலிருந்து விலகி நில்

Friday, January 7, 2011

சங்கராபுரம்

சங்கராபுரம் தாலுக்காவில் உள்ள ஊர்கள்
1.சங்கராபுரம்
2.தேவபாண்டலம்
3.மூரார்பாளையம்
4.சேமபாளையம்
5.சிறுவள்ளூர்
6.இராமராஜபுரம்

Wednesday, December 8, 2010

நீண்ட சோதனை நன்மைக்கான வழி...

நீண்ட சோதனை நன்மைக்கான வழி...


சோதனையின் போதுதான் ஒரு முஃமினிடமிருக்கும் விசுவாசம் புலப்ப டும். அவன் பிரார்த்தனையை அதிகரித்துக் கொண்டே செல்வான். பிரார்த்தனைகளுக்குரிய விளைவைக் காணமாட்டான். ஆனால், நிராசை அடைவதற்கான காரணங்கள் பலமடைந்தாலும் அவனது எதிர்பார்ப் பில் மாற்றம் நிகழாது.

அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது பொறுமை அல்லது விசுவாசம் தான். அவனது உள்ளம் எந்தளவு கட்டுப்படுகின்றது அல்லது பிரார்த்த னையை அதிகரிக்கின்றது என்பதைக் கொண்டுதான் அதன் பொறுமை யைப் பார்க்கலாம். அதனை வைத்துத்தான் அவனது நிலையைத் தீர்மா னிக்கலாம்.

தனது பிரார்த்தனைக்கான பதிலை அவசரமாக எதிர்பார்ப்பவனைப் பொறுத்தவரை அது அவசரமாகக் கிடைக்காவிட்டால் நிராசையுற்று விடுவான். இவன் பலவீனமான விசுவாசம் கொண்டவன். தனது பிரார்த்தனைக்கான விளைவு கிடைக்கப்பெறுவது தனது உரிமை என்று அவன் நினைக்கிறான். இவன் தனது வேலைக்கான கூலியைக் கேட் பவன் போன்றிருக்கிறான்.
யஃகூப் (அலை) அவர்களது கதையை நீங்கள் கேள்விப்படவில்லையா? ஏறக்குறைய 80 வருடங்கள் சோதனையை அனுபவித்தார்கள். யூஸுப் (அலை) அவர்களையும் புன்யாமீனையும் இழந்தார்கள். ஆனால், அவர்களது எதிர்பார்க்கை மாறவில்லை. "அவர்கள் அனைவரை யும் அல்லாஹ் என்னிடத்தில் கொண்டுவந்து தரலாம்..." (ஸூறா யூஸுப்)

அல்லாஹ் இக்கருத்தை இப்படிச் சொல்கிறான்: "உங்களுக்கு முன்னி ருந்தவர்களுக்கு வந்த சோதனை போல உங்களுக்கும் வராமல் நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துகொள்ளலாமென்று நினைக்கிறீர்களா? அவர்கள் மிகக் கடுமையாக உசுப்பப்பட்டார்கள். தூதரும் அவரோடு விசுவாசம் கொண்டோரும் எப்போது அல்லாஹ்வின் வெற்றி கிடைக்கும் என்று கூட கேட்டனர். அல்லாஹ்வின் உதவி மிக அண்மையில் இல் லையா?" (ஸூறா பகரா: 214)

தூதரும் விசுவாசிகளும் இதனை நீண்ட சோதனையின் பின்னரும், விடிவு பற்றிய நம்பிக்கையீனம் அண்மித்தபோதுதான் கூறினார்கள் என்பது தெளிவான விடயம்.
நபியவர்கள் இதனை இப்படிச் சொல்கிறார்கள்:
"அடியான் அவசரப்படாதவரைக்கும் நல்ல நிலையிலேயே இருக்கி றான். அப்போது, அவசரப்படுதல் என்பது என்ன என்று வினவப்பட்டது. அதற்கவர்கள்: நான் பிரார்த்தித்தேன். என்றாலும், எனக்கு பதிலளிக்கப் படவில்லையே என்று அவன் கூறுவதாகும்" என்று கூறினார்கள்.

சோதனையின் காலத்தை நீண்டதாய்ப் பார்ப்பதனை விட்டும் அதனை மிகையாகப் பார்ப்பதை விட்டும், நிராசையடைவதை விட்டும் நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ சோதிக்கப் படுபவன். பொறுமை மற்றும் பிரார்த்தனையின் மூலம் நீ அடிமை என நிரூபிக்கின்றாய். சோதனை நீண்டு செல்லலாம். ஆனால், அவனது அருள் கிடைக்காது என நீ நம்பிக்கை இழந்துவிடாதே.
இமாம் இப்னுல் ஜௌஸி (றஹ்)

பாப்ரி மஸ்ஜித்:பாராளுமன்றத்தின் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தர்ணா போராட்டம்

பாப்ரி மஸ்ஜித் இடித்த இடத்தில் மீண்டும் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது.  
'பாப்ரி மஸ்ஜித் நீதியைத் தேடுகிறது' என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் இரண்டு மாதம் நீண்ட பிரச்சார நிகழ்ச்சியின் துவக்கமாக இது அமைந்தது.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

தர்ணாவில் கலந்துக் கொண்டு உரைநிகழ்த்திய தலைவர்கள், பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், இவ்வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தேசத்தின் மதசார்பற்ற தன்மைக்கு ஏற்பட்ட களங்கம் எனக் குறிப்பிட்டனர்.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதுத் தொடர்பாக விசாரணைச் செய்த லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையை நடைமுறைப்படுத்தாத மத்திய அரசின் போக்கையும் தலைவர்கள் கண்டித்தனர்.

உண்மைகளை புறக்கணித்துக் கொண்டு வெளியான தீர்ப்பு திருத்தப்படுவதற்காக தேசம் காத்திருக்கிறது என தர்ணாவை துவக்கிவைத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தெரிவித்தார்.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பிரதிநிதி ஹாஃபிஸ் அன்ஸார், SDPI தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர், மாநில கண்வீனர் ராஷித் அக்வான், தேசிய துணைத் தலைவர் ஸாஜித் சித்தீகி, முஹம்மது ஷஹாப், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா பிரதிநிதி டாக்டர்.அன்வாருல் இஸ்லாம், முஸ்லிம் பொலிடிகல் கவுன்சில் தலைவர் தஸ்லீம் ரஹ்மானி, முஸ்லிம் இஸ்லாஹி தஹ்ரீக் தலைவர் அப்துல் வஹ்ஹாப் கில்ஜி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

Saturday, November 27, 2010

பாப்ரி மஸ்ஜித்:துயர நினைவலைகளின் பதினெட்டாவது ஆண்டு

l
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மத சகிப்புத் தன்மையின் மார்பை பிளந்து இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும் இறையில்லமுமான பாப்ரி மஸ்ஜிதின் குவிமாடங்களை ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் இடித்துத் தள்ளிய இருளான நினைவலைகளுக்கு இன்று பதினெட்டாவது ஆண்டு.

பாப்ரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் மஸ்ஜிதை அது நிலைப்பெற்றிருந்த இடத்திலேயே கட்டுவோம் என்ற மத்திய அரசின் வாக்குறுதி இன்னமும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு சங்க்பரிவார தலைவர்கள்தான் காரணம் என லிபர்ஹான் கமிஷன் கண்டறிந்த பிறகு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பாப்ரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில் நீண்டகாலமாக காத்திருப்பிற்கு பின் வெளிவந்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்போ வரலாற்று உண்மைகளை நிராகரித்துவிட்டு ஆதாரங்களுக்கு பதிலாக புராணங்களுக்கும், புரட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த சந்தேகங்களை தேசத்திற்கு அளித்தது.

வரலாற்றின் மீது சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்தும் அத்துமீறல்களுடன் ஆட்சியாளர்கள் மற்றும் நீதிபீடத்தில் வீற்றிருப்போரின் குற்றகரமான பாரபட்ச முடிவுகளும் பாப்ரி மஸ்ஜித் குறித்த நினைவுகளை வேதனைக்குரியதாக மாற்றுகிறது.


நீண்ட 60 ஆண்டுகால காத்திருப்பின் இறுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வெளியிட்ட 'பாகப் பிரிவினை தீர்ப்பு' இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக தகவல்கள் உறுதிச்செய்கின்றன.

தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான நடவடிக்கைகள் ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைமையில் நடந்துவருகிறது.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட வேண்டும் எனக்கோரி போராட்டங்களை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன முஸ்லிம் அமைப்புகள்.

Monday, November 22, 2010

திருபுவனத்தில் இரத்ததான முகாம்

திருபுவனத்தில் இரத்ததான முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் நகரில் பல்வேறு சமூக நல பணிகளை தொடர்ந்து செய்து வரும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்  மற்றுமொரு மகத்தான சேவையாக  நேற்றும் இன்றும் இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம்  சிறப்பாக நடைபெற்றது .
20.11.2010 காலை 10 மணிக்கு  SDPI  தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் முகாம் ஆரம்பமானது
துணைத்தலைவர் முஹமது ஜுபைர் முன்னிலை வகிக்க திருபுவனம் பேரூராட்சி தலைவர் S Kமணி அவர்கள் இரத்ததான முகாமை துவங்கி வைத்தார் . SM மார்டின் அவர்கள் இரத்த வகை கன்டறியும் முகாமை துவக்கி வைத்தார்கள். மாவட்ட அரசு மருத்துவமனை யும் SDPI யும் இணைந்து நடத்திய இம்முகாமில் சுமார் ஐம்பத்தி ஒன்று நபர்கள் தலா 250 மில்லி அளவில் இரத்த தானம் செய்தனர்.இரத்த வகை கண்டறிய கூட்டம் அலைமோதியதால் தொடர்ந்து இன்றும் முகாம் நடத்தபட்டது . முகாமில் சுமார் அறுநூறு நபர்களுக்கு இரத்த வகை கண்டறியப்பட்டது 
செய்தி - ரஹ்மான் ஸாதிக் 
மாவட்ட காரிய கமிட்டி உறுப்பினர் 
நன்றி தினமலர் திருச்சி பதிப்பு 21-11-2010


 

Healthy People Healthy Nation


--
POPULAR FRONT OF INDIA
State Head Quarters,
#35/23, Modern Tower,5th Floor,
West Cott Road,Royapettah,
 Chennai - 600 014.Tamilnadu,
Ph:044-64611961, Fax:044-28484003
www.popularfronttn.org
www.popularfrontindia.org


Healthy People Healthy Nation : Chennai Inaugural Function

Mini Marathon at Marina Beach
Monday, November 22nd, 2010
Chennai Marathon
Chennai Marina Beach Marathon Running
Chennai Nov 21 Inauguration session of Mini Marathon program held,  as a part of this Healthy people Healthy Nation campaign,  at Chennai Marina Beach, presided by Popular front of India's Tamilnadu State President Mohamed Ali Jinna.
Mini Marathon running started from Anna memorial square and ended at Light house.
In presence of State Executive council members M.Nijam mohideen and A.Zulfikar Ali, Marathon running was inaugurated by A.Fakhrudeen at 7 am today on November 21, 2010.
After reaching the light house President Jinna gave a brief address on the importance of individual Heath in nation building efforts.
Those people remain healthy physically and having sound mind can play a major role effectively in nation building initiatives. So we had conducted programs like yoga classes, exercise demonstration classes, swimming,  games and other awareness programs etc  last year which was welcomed by all sections of our Indian society.
Similarly, this year we are conducting free medical camp, free blood group identification camp, blood donation and various programs throughout the nation.
In India many people are affected by the silent killer diseases like diabetes Blood pressure etc. Daily 30 minutes Physical exercises can overcome  many of these diseases to some extent. Awareness about the importance is very low among us, He said
A book was released on the subject entitled  "Physical exercise and Health" was published and distributed.
Finally J.Mohamed Nazim, Chennai District President gave vote of thanks. Hundreds of people gathered and participated in mini marathon. Cleaning public places also conducted.
Earlier Popular front of India had announced that from November 21 to November 28 it will observe Public Health week and organizes various nationwide mass awakening programs urging the importance of Public Health Hygiene and cleanliness. Last year it was conducted on November 1 to 15.This year awareness program is being conducted in 12 Indian states.
Book Release on Health
ZUlfikar Ali SEC member receives Book from Chennai district president Nazim

Thursday, November 18, 2010

ஒரு ஷஹீதினுடைய தந்தையின் அனுதாபம்

ஒரு ஷஹீதினுடைய தந்தையின் அனுதாபம்
உஸ்தாத் உமர் தில்மிஸானி கூறுகிறார்கள்: "இமாம் ஹஸனுல் பன்னா (றஹ்) அவர்கள், இந்தப் பரம்பரையினு டைய இளைஞர்களின் உள்ளங்களில் ஜிஹாதிய உணர்வை உயிர்ப்பித்திருந்தார்கள்.
அதனால், இமாமவர்களும் தாக்கமடைந்து இளைஞர்களும் தாக்கம் பெற்றிருந்தனர். அவர்களது பெற்றோர்களையும் அது பாதித்திருந்தது.

அந்த உருவாக்கத்தின் உருக்கமான ஒரு நிகழ்வு இது.

பலஸ்தீனப் போராட்டத்தில் இஹ்வானிய சகோதரர் ஒருவர் ஷஹீதா னார். இமாமவர்கள் அனுதாபம் தெரிவிப்ப தற்காக அந்த ஷஹீதின் தந்தையிடம் சென்றிருந்தார். எல்லோருக்கும் உருக்கமான பாட மொன்றை அது கற்றுக் கொடுத்தது.

அந்தத் தந்தை இமாமவர்களிடம் சொன்னார்; "நீங்கள் இங்கு எனக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக வந்திருந்தால் நீங்களும் உங்களுடன் வந்திருப்பவர்களும் திரும்பிச் சென்று விடுங்கள். மாறாக, என்னை வாழ்த்துவதற்காக நீங்கள் வந் திருந்தால் உங்களையும் உங்களுடன் வந்திருப்பவர்களை யும் நான் வரவேற்கிறேன்.

நீங்கள்தான் எங்களுக்கு ஜிஹாதைக் கற்றுத் தந்தீர்கள். இவ்வுலகிலே அதற்குக் கிடைக்கும் கண்ணியம், அந்தஸ்து, மறுமையில் கிடைக்கும் மகத்தான கூலி என்பவற்றையும் விளங்கப்படுத்தினீர்கள். உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

நான் பலமடங்கு கூலிகளைப் பெற ஆசை கொண்டிருக்கி றேன். இதோ! என் இரண்டாவது மகன். இவரை ஜிஹாதியக் களத்திற்கு அழைத்துச் செல்லுமாறு உங்களிடம் சத்தியம் செய்து ஒப்படைக்கி றேன்."

இதைக் கேட்ட இமாமவர்களுக்கு கண்ணீர் பிரவாகம் எடுத்தது. மெய் சிலிர்த்து மூச்சு வாங்கியது. இமாமவர்கள் அதிர்ந்துபோனார்கள்.

Wednesday, November 10, 2010

ஒபாமாவின் இந்திய வருகையை கண்டித்து லக்னோவில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!


06 November, 2010

ஒபாமாவின் இந்திய வருகையை கண்டித்து லக்னோவில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!



ஒபாமாவின் இந்திய வருகையை கண்டித்து லக்னோவில் முஸ்லிம் அமைப்புகள்  ஆர்ப்பாட்டம்

sumaiya

                                                                  M.R.Sumaiya
Hai,I am M.R.Sumaiya.I am studying in V std. C sec.,
AKT memorial CBSE school,Kallakkurichi near
Sankarapuram.My class teacher name is V.P.Chandran sir.
My father name is A.Mohamed rafi.
My mother name is M.A.Shabana.